Tuesday 17 January 2012

அரைக்கீரையின் மருத்துவக் குணங்கள்


அரைக்கீரையின் மருத்துவக் குணங்கள்
[ செவ்வாய்க்கிழமை, 17 சனவரி 2012, 07:20.11 மு.ப GMT ]
அரைக்கீரை ஓர் நல்ல சுவையான உணவு என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் இந்தக் கீரை மன உளைச்சல், மூளைச் சூடு போன்றவற்றை நீக்கும் ஓர் நல்ல மருத்துவப் பொருளாக செயல்படுகின்றது.
பித்த நோயை தீர்க்கவும் நீரிழிவின் பாதிப்பைக் குறைக்கவும் உதவுகின்றது. அரைக் கீரை பெண்களுக்கு ஏற்ற ஓர் சிறந்த மருந்தாக செயல்படுகின்றது.
அரைக் கீரையின் பயன்களை அன்றே தமிழ் மூதாட்டி ஔவையார் பாடியுள்ளார். இக்கீரையை சமைத்து உண்டுவந்தால் மேற்கண்ட பலன்களைப் பெறலாம்.
இந்தக்கீரையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி தினமும் பாலில் அரைத் தேக்கரண்டி அளவு எடுத்து மூன்று வேளையும் அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

No comments:

Post a Comment