Saturday 15 December 2012

ஆண்தன்மை அதிகரிக்க, உயிரணுக்கள் வலிமைபெற எளிமையான வழிகள்!


ஆண்தன்மை அதிகரிக்க, உயிரணுக்கள் வலிமைபெற எளிமையான வழிகள்!

ஆண்தன்மை அதிகரிக்க, உயிரணுக்கள்  வலிமைபெற எளிமையான வழிகள்!
இன்றைய உலகம் அறைகளுக்குள்ளேயே அடைபடும் வாழ்க்கையைத் தான் எல்லாருக்கும் தந்திருக்கிறது. அலுவலகத்தின் அறைகளுக்குள் நாள் முழுவதும் அடைபடுவதும், விடுமுறை நாட்களில் வீடுகளில் அடைபடுவதும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் மூழ்கிப் போவதுமாய் கழிகிறது நமது வாழக்கை.
இந்த வாழ்க்கை முறைக்கும் குழந்தையின்மைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என அதிர்ச்சி வைத்தியம் அளிக்கிறது ஆஸ்திரேலிய ஆராய்ச்சி ஒன்று.
மூன்றில் ஒரு பங்கு ஆண்களுக்கு விந்தணுக்கள் வலுவற்றிருப்பதே இன்றைக்கு குழந்தையின்மைப் பிரச்சனை எங்கும் தழைத்து வளர்வதன் முக்கிய காரணம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
விந்தணுக்கள் வலிமை இழக்க முக்கியமான ஒரு காரணம் உடலில் ”வைட்டமின் டி” குறைவது என்பது இவர்களுடைய ஆராய்ச்சியின் முடிவாகும். தேவையான அளவு ”வைட்டமின் டி” உடலில் இருக்கும் போது விந்தணுக்கள் வலிமையடைகின்றன.
தம்பதியர் பெற்றோராகும் வாய்ப்பு பிரகாசமடைகிறது. அதற்கு அவர்கள் செய்யவேண்டியதெல்லாம் சட்டையைக் கழற்றி ஓரமாய் வைத்து விட்டு கொஞ்சநேரம் வெயிலில் கால்களுக்கு இதமாக நடந்து வருவது தான்! காரணம், சூரிய ஒளியில் ”வைட்டமின் டி” உள்ளது.
இந்த ஆய்வை நடத்திய போது இந்த ஆய்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரண்டு மாதங்களில் விந்தணுக்களின் வலிமையும், எண்ணிக்கையும், உருவமும் பல மடங்கு மேம்பட்டதாகச் சொல்கிறார் இந்த ஆராய்ச்சியை நடத்திய மருத்துவர் கிளார்க்.
இந்த சோதனையில் மூலம் 35 விழுக்காடு பேர் குழந்தையின்மைச் சிக்கலையும் தீர்த்திருக்கின்றனர் என்பது வியப்பூட்டுகிறது.அலுவலக அறைகளுக்குள்ளேயே அடைபட்டுக் கிடப்பவர்கள் அவ்வப்போது எழுந்து சாலையோர டீ கடைக்குச் சென்று சுடச்சுட டீயும், வைட்டமின் டீயும் பெற்றுக் கொள்வது ஆரோக்கிய வாழ்வுக்குச் சிறந்தது என்பதே இந்த ஆராய்ச்சியின் முடிவாகும்.
புகை, மது, காபி போன்றவற்றை உட்கொள்ளாமலும் அளவான உடற்பயிற்சி மேற்கொள்வதும் என உடலை ஆரோக்கியமாய் காத்துக் கொள்ளும் ஆண்கள் கொஞ்ச நேரம் வெயிலிலும் நடந்து வந்தால் வாழ்க்கை சந்தோஷமாகவும் அமையும்….
 ஆண்தன்மை அதிகரிக்க முருங்கை :
ஆண்மை விருத்திக்கு முருங்கையும், மூலிகையும் இன்று கடைகளில் விற்பனையாகும் மருந்துகளைக் விட இரண்டல்ல பத்தல்ல. ஆயிரம் மடங்கு சிறந்தவை, உயர்ந்தவை, உகந்தவை.
ஆயிரம் முறை போகம் (உடலுறவு) செய்தாலும், உடற்கட்டு சிறிதும் குறையாமல் இருந்ததால் பழனிசித்தருக்கு போகர் என்று பெயர் வந்தது. அவர் சீனா சென்று பல ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். அந்நாட்டிலும் அவருக்குப் போகர் என்றே பெயர் இருந்ததாகக் கூறப்படுகிறது.
மூலிகைகள் உண்டு அதிக போகத்தில் (உடலுறவில்) ஈடுபட்டதால் போகர் என்றே பெயர் பெற்றார். அவர் சொன்ன மூலிகைகளில் முருங்கை எப்படி வயகரா போல் வேலை செய்கிறது என்பதைப் பார்ப்போம்.
முருங்கையின் அனைத்து உறுப்புகள் மற்ற மருந்துப் பொருளோடு சேர்ந்தால் வயகராவை விட பன்மடங்கு பயனளிக்கிறது.
ஆண்தன்மை அதிகரிக்க :முருங்கைக் கீரை, முருங்கைப்பூ, இவ்விரண்டும் சம அளவில் சேர்த்து, சிறுசிறு துண்டுகளாக வெட்டி, வதக்கி, பொரித்து, அதில் வேர்க்கடலையை வறுத்துப் பொடி செய்து, தூவி உணவுடன் சேர்த்துண்ண ஆண்தன்மை அதிகரிக்கும்.. விறைப்பு நீடிக்கும், வேகமும் பெருகும், வானளவு இன்பத்தைப் பெண்ணுக்கு வாரி வழங்கிட ஆண்தன்மை வந்து துள்ளும், கீரையும், பூவும் சம அளவில் சேர்த்து, வேகவைத்து கடைந்து குழம்பாகவும் உபயோகிக்கலாம்.
விந்து விருத்தியாக :
முருங்கைப் பூ 10, சுத்தமான பசும்பாலில் சேர்த்து, காய்ச்சி இரவு படுக்கும்போது குடிக்க, விந்து விருத்தியாகும், தேகம் பலம் பெறும், அத்துடன் பேரீச்சம்பழம் சேர்த்துச் சாப்பிட, விந்து விருத்தியாவது மட்டுமின்றி விந்து கெட்டியாகும். விந்து சீக்கிரம் முந்தாமலும் இருக்கும். தெவிட்டாத தேன் உண்டது போல், தீராத தாகம் தீர்ந்தது போல், ஆனந்தக் கடலில் ஆண், பெண் மூழ்கலாம்.
இச்சை பெருக :
முருங்கைப் பூவை உணவாகவோ, மருந்துகளில் சேர்த்தோ, பச்சையாகவோ எந்த விதத்தில், எந்த மாதிரி உபயோகப்படுத்தினாலும், உண்டபின் உடலில் காமத்தைப் பெருக்கும். இச்சையைத் தூண்டும். பச்சையாக நான்கு பூவை தினம் இருவேளை மென்று திண்ணலாம். அரைக்கீரையுடன் அரை பங்கு முருங்கை பூ சேர்த்துக்கடைந்து, சோற்றுடன் சாப்பிடலாம்.
இச்சை பெருகும், வயகரா உண்டால், உணர்ச்சி வந்து, உடன் போய்விடும். ஆனால் இந்த இயற்கை வயகரா உண்டால், அணையில் நீர்த்தேக்கம் போல் காம உணர்ச்சி அப்படியே அலைமோதி நிற்கும். வயகரா உண்டவருக்கு ஒருவித மின்சாரம் தாக்கியது போன்ற காம வலிப்பு வந்து போய்விடும். ஆனால் இந்த முருங்கை வயகரா உண்டால் உடலிலுள்ள 72,000 நரம்புகளிலும் இன்பக் களிப்பு ஏகாந்த நடனமிடும்.
பாலுறவில் பரவசமடைய :
முருங்கைக் கீரையைப் பொடியாக அரிந்து, அதில் கேரட் திருவி போட்டு, பசு நெய் விட்டு, பொரித்து, இறுதியில் முட்டையை அதில் ஊற்றி கிளறி, பொரித்துண்ண ஆண்கள் பாலுறவில் பரவசமடைவர். ஆண்மை அதிகரித்து ஆனந்தம் அடைவர். இல்லாள் கணவன்மீது ஈடில்லா பாசமும், மதிப்பும் கொள்வாள். இல்லற சுகத்தில் இருவரும் ஒரு நிலையில் உல்லாசம் காண்பர்.
உடலுறவில் மகிழ்ச்சி நீடிக்க :
முருங்கையின் இளம் பிஞ்சுக் காயைக் கொண்டு வந்து அனலில் காட்டி, சாறு பிழிந்து குடிக்க, காம உணர்வு பெருகும், மனையாளுக்கு பெருமகிழ்ச்சி அளிக்குமளவு உடலுறவில் இன்புறல் நீடிக்கும்.
சிலருக்கு மனைவியோடு எவ்வளவு நேரம் பேசிக் கொண்டு, விளையாடிக் கொண்டிருந்தாலும் உடலுறவில் ஈடுபட்டால் ஒரு நிமிடத்தில் விந்து வெளியாகிவிடும். இதனால் அவர்கள் மிகுந்த வேதனைப்படுவர். இப்படிப்பட்டவர்களுக்கு இம்முறை சிறந்த பலனளிக்கும்.
வயதானோரும் வாலிப சுகம் அடைய :
முருங்கையின் மிகவும் பூப்போன்ற இளம்பிஞ்சு எடுத்து வந்து, பட்டாணி அளவு சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, லேசாக உப்பு, மிளகு தூவி, பச்சையாகவே உண்டால், கிழவனுக்கும் காளையைப் போல் காம இச்சை ஏற்படும்.
 தினம் ஒரு கப் தக்காளி சூப் :
விந்தணு குறைபாட்டினால் புதிய சந்ததியை உருவாக்க முடியாத நிலை. அதனால் ஏற்படும் மனச்சோர்வு ஆண்களை பாதிப்பிற்குள்ளாக்குகிறது. இந்த குறைபாட்டை நீங்க மருத்துவமனைகளுக்கு சென்று பல ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கும் ஆளாகின்றனர்.
ஆண்மைக் குறைபாடுள்ள ஆண்கள் இனி கவலைப்பட வேண்டாம் தக்காளி சூப் அவர்களுக்கு நிவாரணம் தருகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். தினம் ஒரு கப் தக்காளி சூப் குடிப்பது விந்தணுக்களின் வீரியத் தன்மையை அதிகரிக்கும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர்.
தக்காளியில் இருக்கும் லைக்கோப்பின் எனும் பொருள் தான் தக்காளிக்கு அடர் சிவப்பு நிறத்தைத் தருகிறது. அந்த மூலக்கூறு தான் ஆண்களின் விந்தணு வீரியத்திற்கு காரணமாய் இருக்கிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். லைக்கோப்பின் ஆனது புற்று நோயை தடுக்கும் சக்தி உடையதாக இருப்பதால் தக்காளி உட்கொள்வது புற்றுநோய் செல்களை அழிக்கும் என்பது பல காலமாக பேசப்பட்டு வரும் தகவல். இப்போது “இந்த” புதிய பயனும் அதனுடன் இணைந்திருக்கிறது..
சும்மாவே தக்காளி விலை உச்சத்திற்கு போய்க் கொண்டிருக்கிறது. இந்த ஆராய்ச்சி முடிவை படித்தவுடன் தினம் வீட்டில் தக்காளி சூப் வைக்க சொல்லி நச்சரிக்கப் போகிறார்கள் ஆண்கள் – அதுக்காக ஆண்மைக் குறைவு உள்ளவர்கள் மட்டும்தான் சூப் குடிக்கணும் என்றில்லை. இல்லாதவங்களும் கூட குடிக்கலாம் – வராம தவிர்க்கலாம்….
தேவையான பொருட்கள் :
நன்கு பழுத்த தக்காளி – 5
பெரிய வெங்காயம் – 1
பூண்டு – 6 பல்
சோள மாவு – 1 மேஜைக் கரண்டி
வெண்ணெய் – 2 தேக்கரண்டி
தக்காளி சாஸ் – 2 மேஜைக் கரண்டி
மிளகுத்தூள் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
1. வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
2. வெண்ணெயை உருக்கி, அதில் பூண்டு சேர்த்து வதக்கவும். பூண்டு வதங்கியதும், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
3. வெங்காயம் வதங்கியதும், தக்காளி, தேவையான அளவு உப்பு ஆகியவை சேர்த்து வதக்கவும்.
4. தக்காளி பச்சை வாசனை போக வதங்கியபின், 300 மில்லி தண்ணீர் (அல்லது கால் லிட்டர்) தண்ணீர் சேர்க்கவும்.
5. சிறு தீயில் 10 நிமிடம் கொதித்த பிறகு, கரண்டியால் நன்கு மசித்து வடிகட்டிக் கொள்ளவும்.
6. வடிகட்டிய தண்ணீரில் தக்காளி சாஸ் கலந்து, பிறகு அதில் தனியே தண்ணீரில் கரைத்த சோள மாவைச் சேர்க்கவும்.
7. பின்னர் 5 நிமிடம் கொதிக்கவிட்ட இறக்கி வைத்து, மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.

உங்களுக்கு இதை தெரியுமா ?-ஆண்மை பெருக்கும் வீட்டிலே உள்ள மூலிகைஉணவுகள்.


உங்களுக்கு இதை தெரியுமா ?-ஆண்மை பெருக்கும் வீட்டிலே உள்ள மூலிகை உணவுகள்.

உங்களுக்கு இதை தெரியுமா ?-ஆண்மை பெருக்கும் வீட்டிலே உள்ள மூலிகை உணவுகள்.
நாம எங்கெங்கோ தேடி தேடி அலைவோம் ஆனால் வீட்டிலே இத்தனை மூலிகைகள்,உணவு மூலிகைகள் ஆண்மையை பெருக்கும் என்பதை உணர்ந்து சாப்பிடுகிறோமா நாம்?.




முருங்கை ,முருங்கை விதை
பாதாம்
உளுந்து
பேரிச்சம் பழம்
வெங்காயம்,வெங்காய விதை
முந்திரி
பிஸ்தா
நிலக்கடலை
முள்ளங்கி விதை
ஆளியம்-ஆளி விதை
இலவங்க பட்டை
சாரப்பருப்பு
இவை மட்டுமில்லை -பாதம் பிசின்,இலவம் பிசின்,முருங்கை பிசின் போன்றவைகளும்,சாலாமிசிரி,கரு வேலம்,காட்டு சதகுப்பை,தட்டை பயிறு,நாகமல்லி,நிலபூசணி,அக்ரோட்டு ,பருத்தி ,பனை,வில்வம்,வெண்டை போன்ற உணவுகளும் ஆண்மை பெருக்கும்-காதல் வளர்க்கும் .

ஆட்டு மூளை சாப்பிட்டா ஆண்மை பெருகுமாம்!!


ஆட்டு மூளை சாப்பிட்டா ஆண்மை பெருகுமாம்!!

ஆடு, கோழி, மீன், போன்ற மாமிச உணவுகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொருவகையான சத்துக்கள் காணப்படுகின்றன. கோடை காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய உணவுகளை சாப்பிடவேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆட்டு மாமிசம் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. ஆட்டுக்கறியில் புரதச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. ஆட்டின் ஒவ்வொரு உறுப்பும் ஒவ்வொருவிதமான பலனை தருவதாக உள்ளது.
இதயத்திற்கு பலம்
ஒரு சிலருக்கு தலைக்கறி மிகவும் விருப்பமாக இருக்கும். தேங்காய் பாலில் சமைத்து சாப்பிடுவார்கள். இந்த தலைக்கறியை சாப்பிட்டால் இதயநோய் தீரும் என்கின்றனர் மருத்துவர்கள். தலை தொடர்பான நோய் இருந்தால் அறவே அற்றுப்போகுமாம். குடலுக்கு பலம் கிடைக்கும். ஆட்டின் கண் சாப்பிட்டால் பார்வை கோளாறு உள்ளவர்களுக்கு பலம் கிடைக்கும். கண் கோளாறுகள் சரியாகும். ஆட்டின் நாக்கு உடல் சூட்டை அகற்றும். சருமத்திற்கு இளமை தரும் பளபளப்பை தரும்.
ஆண்மை பெருகும்
ஒரு சிலர் ஆட்டின் மூளையை தனியாக வறுத்து சாப்பிடுவார்கள். இதன் சுவையே அலாதியானது. இது மனித மூளைக்கு அதிக சக்தியை கொடுக்கும். கண்கள் குளிர்ச்சி பெறும். புத்தி தெளிவடையும், நினைவாற்றல் அதிகரிக்கும். விந்தணு குறைபாடு உடைய ஆண்கள் இதை சாப்பிட தாது விருத்தி உண்டாகும். இதேபோல் ஆட்டின் குண்டிக்காய் சமைத்து சாப்பிட இடுப்புக்கும் குண்டிக் காய்க்கும் பலம் தரும். இடுப்பு நோய் அகற்றும். தாது விருத்தியாகும். ஆண் குறி பருக்கும்.
கபநோய் நீங்கும்
கப நோய் பாதிப்புள்ளவர்கள் ஆட்டின் மார்பு பகுதியில் உள்ள கறியை சாப்பிட்டலாம். நெஞ்சு எலும்பு கறியை சமைத்து உண்பதால் மார்புக்கு பலம் கிடைக்கும். மார்பு பகுதியில் உள்ள புண்கள் ஆறும். ஆட்டு இதயம் சாப்பிட்டால் நமது இதயத்திற்கு பலம் கிடைக்கும். மன ஆற்றல் பெருகும்.
உடலுக்கு குளிர்ச்சி
ஆட்டின் நுரையீரல் சாப்பிட்டால் உடல் வெப்பம் தணியும், நுரையீரலுக்கு வலு கிடைக்கும். அதேபோல் ஆட்டின் கொழுப்பு இதயத்திற்கு நல்ல பலத்தை தரும். வயிற்றில் உள்ள எந்தவித புண்களையும் ஆற்றும் சக்தி இதற்கு உண்டு. கால், மூட்டு நோவு உள்ளவர்கள் ஆட்டுக்கால் சூப் வைத்து குடிக்கலாம். இதனால் கால்களுக்கு வலிவு கிடைக்கும்.

உடலுறவும் – ஆண்மையும்


உடலுறவும் – ஆண்மையும்

உடல் உறவின் பின்னர் உறுப்பு சுருக்கமடைந்து விடுகின்றன. இதன் பின் மறுபடியும் உறவில் ஈடுபட உறுப்பு ஆயத்தமாக அரை மணித்தியாலங்கள் நேரமெடுக்கும். சிலருக்கு இதை விட நேரமெடுக்கலாம்.ஆனால் தொடர்ந்து பல முறை உறவில் ஈடுபடுவதால் உங்கள் ஆரோக்கியம் கெட இடமுண்டு.
பாலியல் இணைப்பு என்பது ஒரு மரதன் ஓட்டப் போட்டி அல்ல. குறைந்த நேரத்திற்குள் நீண்ட தூரம் ஓடி சாதனை படைப்பது போல குறைந்த நேரத்துக்குள் பலமுறை இணைப்பில் ஈடுபட்டு சாதனை செய்ய முயன்றால் அது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும்.
இதனின் போது உடலுறவில் ஈடுபடுவது எத்தனை முறை என்பது முக்கியமில்லை. முக்கியமானது ஈடுபடும் முறை என்ன என்பதே. நீண்ட நேரம் உறவில் ஈடுபட்டு உச்ச நிலையை தக்க வைத்துக் கொண்டு செயற்படுவதன் மூலம் ஒரு பெண்ணை திருப்திப்படுத்த முடியும்.
உங்களது ஆண்மை செயற்பாடு இதில் தான் அடங்கி உள்ளது. ஜரோப்பிய நாடுகளில் உறவு பற்றி சில புத்தகங்கள் வெளியாகின்றன. எமது நாட்டிலும் ர்த்தகங்கள் வெளிவருகின்றன. இவைகளில் படிப்பவர்களுக்கு ஒரு சிலர் சலிப்பை தரவென்று சில கற்பனை கதைகளையும் வைத்து எழுதி விடுகின்றனர்.
இவைகளில் ஒரே இரவில் பல பெண்களை திருப்திபடுத்திடும் வகையிலான கதைகளும் இடம் பெற்றிருக்கும். இவைகளை வாசிப்பவர்கள் இவைகளை உண்மை என நினைத்து தங்களும் அது போல செயற்படும் திறன் இல்லை என்று நினைத்து தமக்கு ஆண்மை குறைபாடு அல்லது ஆண்மையற்ற தன்மை உன்று மனம் தளர்ந்து விடுகின்றனர்.
இது போன்றவர் மேல் அனுதாபம் கொள்வதை தவிர வேறு எதையும் செய்ய முடியாது… இது போன்ற கருத்துகளை நம்பி எப்போது உங்கள் வாழ்க்கை வீணாக்கி விடாதீர்கள்.. இவ்வாறு பல முறை இளமை உங்களுக்கு எச்சரித்துள்ளது..!!
கற்பனையில் எதையும் எழுத முடியும் ஆனால் அவைகளில் வருவது போன்று நீங்கள் கற்ானை கதாபத்திரம் அல்ல. நீங்கள் ஒரு நிஜமான மனிதன். உங்கள் உடலின் சுகத்திற்கு ஒரு எல்லை இருப்பது போன்று பாலியல் செயற்பாட்டிற்கும் ஒரு எல்லை இருக்கிறது. அதை தாண்டி செயற்படுவது முடியாதது. அப்படி செய்யவும் அவசியமில்லை.
சில ஆண்களுக்கு ஒரு சில குறைகள் நிகழும். ஒரு சிலருக்கு எவ்வளவு நேரம் உறவில் ஈடுபட்டாலும் உச்ச நிலை வெளிப்படுவது இல்லை. ஒரு முறை உறுப்பு எழுந்தால் அது இலகுவில் தளராது. இது துரதிஸ்திடமான நிலையாகும். காரணம் இப்போழுது விந்து வெளிப்படல் வேண்டும் என்று அவர்கள் விரும்பினாலும் அது நிகழாது. தொடர்ந்து இணைப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தால் பெண்ணுக்கு உறுப்பில் வேதனை ஏற்படும் அவள் திருப்தியான இன்பம் பெறுவதற்கு மாறாக வேதனைக்குள்ளாவாள்.
இது போன்ற ஆணை ஆண்மை நிறைந்தவன் என் நினைப்பது முட்டாள்தனம். இந்த நிலையில் இருந்து மீள இவன் கட்டாயமாக மருத்துவரின் சிகிச்சையை பெற வேண்டும். இல்லையாயின் வேறு வழி கிடையாது.
ஆகவே ஆண்மை சக்தி என்பது பெண்ணுடன் இணைவதால் நீங்கள் திருப்தி பெற்ற உங்களுடன் இணைந்த பெண்ணும், திருப்தி பெற்றிருப்பதே தவிர இணைப்பில் ஈடுபவது எத்தனை முறை என்ற கணக்கு அலல. ஆழ்ந்த சிந்தித்துப் பார்த்தால் ஆண்மை சக்தி குறைவது என்பது மனதால் நினைப்பால் ஏற்படும் ஒன்றே என்பது தெளிவாகும்…
வீணாக மனத்தை குழப்பி வாழ்கையை இழந்து விடாதீர்கள்.

ஆண்மை குறைவு போக்க அரும் மருந்து.


ஆண்மை குறைவு போக்க அரும் மருந்து..!!

அமுக்கறான் கிழங்கு 700 கிராம், நிலபனை கிழங்கு 700 கிராம், சுக்கு 70 கிராம், மிளகு 70 கிராம், திப்பிலி 70 கிராம், சித்திர மூலம் 70 கிராம், ஏலம் 35 கிராம், கிராம்பு 35 கிராம், சிறுனாகபூ 35 கிராம், ஜாதிக்காய் 35 கிராம், லவங்க பத்திரி 35 கிராம், சவ்வியம் 72 கிராம், பேரிச்சம் காய் (விதை நீக்கியது) 525 , ஆகியவைகளை நாட்டு மருந்து கடையில் வங்கி நன்றாக இடித்து சலித்து வைத்து கொள்ளவும்.
பிறகு மூன்று லிட்டர் சுத்தமான பசும் பாலில் ஓன்றரை கிலோ நாட்டு வெல்லத்தை கரைத்து நன்றாக பாகு பதம் வரும்வரை மிதமான சூட்டில் காய்ச்சி அதில் இந்த பொடிகளை போட்டு நன்றாக கிளறி இறக்கிவிடுங்கள்.
நன்றாக சூடு ஆறியபிறகு அதில் 50 மில்லி தேனையும், 700 மில்லி நெய்யையும் போட்டு நன்றாக கிளறி காற்று போகாத ஒரு பாட்டலில் இட்டு மூடி வைத்துவிடுங்கள். ஐந்து நாட்கள் கழித்து ஒரு கோலிகுண்டு அளவு மூன்று நேரம் உணவுக்கு முன்னாள் 90 நாட்கள் சாப்பிட்டு வாருங்கள். ஆண்மை குறைவு நீங்கும்.

மலடு நீக்கும் அதிமதுரம்!


மலடு நீக்கும் அதிமதுரம்!

குழந்தை பேறின்மை என்பது இன்றைக்கு அதிகரித்து வருகிறது. இதற்குக் காரணம் மாறிவரும் உணவுப்பழக்கம், காலச்சூழ்நிலையும்தான். ஆணோ, பெண்ணோ மலடாக இருந்தால் அவர்களின் வாழ்க்கையே சூனியமாகிவிடுவதைப்போல உணர்கின்றனர். சந்ததியை உருவாக்க என்ன செய்யலாம் என்பது பற்றி சிந்திக்க தொடங்கிவிடுவார்கள். ஆனால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே மூலிகைகளின் மூலம் மலடு நீக்கும் மருத்துவத்தை கண்டறிந்துள்ளனர் சித்தர்கள். அதிமதுரம் எனப்படும் அரிய மூலிகை எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. இது ஆண், பெண்களின் குழந்தை பேறின்மையை போக்கும் என்றும் சித்தர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மருத்துவ குணங்களைத் தெரிந்து கொள்வோம்.
அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அதிமதுரம் மிக எளிய முறையில் பயன்படுத்தப்பட்டாலே அனேக நோய்களை நீக்கி விட முடியும். மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது. நவீன ஆய்வின் மூலம் இந்த உண்மை வெளியாகியுள்ளது.
மலடு நீங்கும்
அதிமதுரத்தை நன்கு பொடித்து பாலில் கலக்கி சிறிதளவு தேன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாது விருத்தி உண்டாகும். போக சக்தி அதிகரிக்கும். போக சக்தியை இழந்த வாலிபர்களுக்குப் புத்துயிர் அளிக்கும் சிறந்த மூலிகையாகும்.
அதிமதுரத்தினால் பெண்களுக்கு ஏற்படும் கருப்பைத் தொடர்பான நோய்கள் நிவர்த்தியாகும். ஆரோக்கியமான பெண்களின் மலட்டுத்தன்மை நீங்கும்.
அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50_100 கிராம் எடுத்து தண்ணீரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை இரண்டு முதல் மூன்று மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
பிரசவத்திற்கு முந்தைய உதிரப்போக்கு
அதிமதுரம், சீரகம் சரி எடை எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு 20 கிராம் பொடியை 200 மில்லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று தினங்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கை குணமடையச்செய்யலாம்.
தாய்ப்பால் பெருகும்
போதுமான அளவு தாய்ப்பால் இல்லாதவர்கள் ஒரு கிராம் அதிமதுரச் சூரணத்தைப் பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும். இதன் மூலம் குழந்தைகளுக்குக் கூடுதலாக ஊட்டச்சத்து கிடைக்கும்.
மலச்சிக்கல் நீங்கும்
சிறுநீரக கல்லினை நீக்கும் மருந்தாக அதிமதுரம் திகழ்கிறது.
இது சிறுநீர் இரத்தப் போக்கை நிறுத்துவதிலும், சொட்டு மூத்திரத்தை நிவர்த்திக்கவும், சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும் உதவும்.
அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும் பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குவதில் நிகரற்ற முறையில் செயல்படுகிறது. அதிமதுரம், ரோஜா மொக்கு, சோம்பு இவற்றைச் சம அளவில் எடுத்து இடித்துச் சலித்து வைத்துக்கொண்டு, இரவு படுக்கும் போது 4_6 கிராம் பாலில் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் இருக்காது. இலகுவாக மல விருத்தியாகும்.
தொண்டைக் கட்டு இருமல் சளி
அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம எடையில் எடுத்து இளவறுப்பாய் வறுத்து, சூரணம் செய்து வைத்துக் கொண்டு 5 கிராம் அளவில் தேனில் குழைத்துச் சாப்பிட்டால், அதிகச் சூட்டினால் ஏற்படும் இருமல் தீரும்.
அதிமதுரச் சூரணத்தைத் தயாரித்து வைத்துக் கொண்டு இரண்டு சிட்டிகை எடுத்து தேனில் குழைத்து, தினம் மூன்று வேளை சாப்பிட்டால் தொண்டைக் கட்டு, இருமல், சளி குணமாகும். இதைச் சாப்பிட்டு வருபவர்களுக்கு ஆண்மை பலவீனம் நீங்கும். உடல் பலமும், ஆரோக்கியமும் விருத்தியாகும். அதிமதுரம் லேகியம் சாப்பிட்டால் வரட்டு இருமல் தீரும். கோழையுடன் உள்ள இருமலும் தீரும். தொண்டைப் புண் ரணங்கள் விரைவில் ஆறிவிடும்.
ஆஸ்துமா குணமடையும்
அதிமதுரம், அரிசித்திப்பிலி, சித்தரத்தை மூன்றையும் தலா பத்து கிராம் அளவில் சேகரித்து வைத்துக்கொண்டு, இதில் முசுமுசுக்கை இலை பத்து கிராம். ஆடா தொடை இலை பத்து கிராம், இவைகளை 200 மில்லி தண்ணீரில் விட்டுக் காய்ச்சி 50 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி, காலை, இரவு இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், நெஞ்சுச் சளியும் அனைத்து வகைச் சளிகளும் வெளியாகும். இருமல் நின்று விடும். ஆஸ்துமா நோயாளிகளுக்குச் சிறந்த நிவாரணமாகும். இம்முறையில் தயாரிக்கப்பட்ட மருந்தை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருக, சளித்தொல்லை நீங்கும்.
வழுக்கை நீங்கி முடி வளரும்
அதிமதுரத்தை நன்றாகப் பொடி செய்து, அம்மியில் வைத்து எருமைப்பால் விட்டு நன்றாக விழுதாகும் வரை அரைத்து, தேவையான அளவு எருமைப்பாலில் கலக்கித் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளவயதில் ஏற்பட்ட தலை வழுக்கை நீங்கி மீண்டும் மயிர் முளைக்கும். தலையில் உள்ள பொட்டு, பொடுகு, சுண்டு முதலியவை நீங்க, இதைப் பயன்படுத்துவதால் மேற்கண்ட குறைகள் நிவர்த்தியாகும்.
அதிமதுரத்தை நன்றாக அரைத்துப் பசும்பாலில் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளநரை ஏற்படாமல் தடுக்கும். தலை மயிர் உதிர்தல் இருக்காது.

ஆண்மையை விருத்தி செய்யும் அரைக்கீரை!


ஆண்மையை விருத்தி செய்யும் அரைக்கீரை!

உடல் ஆரோக்கியத்தில் கீரைகள் முக்கிய பங்குவகிக்கின்றன. தினசரி ஏதாவது ஒரு வடிவத்தில் கீரைகளை சாப்பிடவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். கீரைகளில் பலவகைகள் உள்ளன. ஒவ்வொரு கீரையும் ஒவ்வொரு வடிவைத்தில் மனிதர்களுக்கு நன்மை தருகின்றன.
பித்த நோய்கள்
அகத்திக் கீரைக்கு பித்தம் தொடர்பான குணமாகும், ஜீரணசக்தி உண்டு பண்ணும். இழந்த பலத்தை மீட்டுத்தரும். இது மலத்தை இளக்கி வெளியேற்றும். சிறிதளவு வாயுவை உண்டு பண்ணும். உயிர்ச்சத்து ‘ஏ’ மற்றும் சுண்ணாம்புச்சத்து அதிக அளவில் இருப்பதால் உடல் வளர்ச்சியையும், கண்பார்வை தெளிவையும் எலும்புகளுக்கும் பலம் கொடுக்கும். ஆரைக் கீரைக்கும் பித்தம் தொடர்பான கோளாறுகளை போக்கும். அளவு மீறிப் போகும் சிறுநீரை கட்டுப்படுத்தி சமநிலைக்கு கொண்டு வரும்.
பொன் போன்ற மேனி
சருமம் பொன்போல பிரகாசிக்க தினசரி பொன்னாங்கண்ணி கீரையை சூப் வைத்து சாப்பிடலாம். பொன்னாங்கண்ணி கீரையை கடைந்து உணவுடன் நெய் சேர்த்து அருந்த உடல் வலுப்பெறும்.
சிகப்பு பொன்னாங்கண்ணி கீரையை பூண்டு சேர்த்து வதக்கி சாப்பாட்டுடன் சாப்பிட்டு வந்தால் மூலநோய் அறுவைசிகிச்சை இல்லாமலேயே குணமாகும். வாய்ப்புண், தொண்டைப்புண் நீங்கும்.
நரைமுடி அகலும்
முளைக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் இளமையில் தலைமுறை நரைக்காமல் இருக்கும். கரிவேப்பிலையை நாள்தோறும் உணவில் ஏதாவது ஒரு வடிவில் சேர்த்துக் கொண்டால் உடலின் இளமைத்தோற்றம் நிலைத்துநிற்கும்.
தாது விருத்தியாகும்
அரைக்கீரை அனைத்து பகுதிகளிலும் எளிதாக கிடைக்கும். இதை பருப்புடன் சேர்ந்து கடைந்து சாப்பிடலாம். இந்த கீரை இரத்தத்தை உற்பத்தி செய்யும். கபத்தை உடைத்து வெளியேற்றும். வாத சம்பந்தமான வியாதி தணிக்கும். நரம்பு வலி, பிடரிவலியை எளிதில் போக்கவல்லது. இது தாதுவை விருத்தி செய்யும். விந்தணு குறைபாடு உள்ளவர்கள் இதை சாப்பிடலாம்.
எலும்பு வளர்ச்சி
புதினா கீரையில் இரும்புச்சத்து இருப்பதால் இரத்தத்தை சுத்தம் செய்து புதிய இரத்தத்தை உண்டு பண்ணும். பற்களை கெட்டிப்படுத்தும், எலும்புகளை வளரச் செய்யும். புதினாவை நசுக்கி போட்டு கஷாயம் வைத்து சாப்பிட்டால் இளமையுடன் வாழலாம். அரை சங்கு புதினாக் கீரையை குழந்தைகளுக்கு கொடுக்க கபம் நீங்கும். கொத்தமல்லிக்கீரையை துவையல் அரைத்து சாப்பிட பித்தம் குணமாகும்.
வயிற்றுப் புண் குணமாகும்
பசலைக்கீரை சாப்பிட நீர் கடுப்பு, வெள்ளை வெட்டை நீங்கும். மிளகு தாக்காளி கீரைக்கு வயிற்றுப் புண்ணை ஆற்றும் சக்தி உள்ளது. பருப்பும், தேங்காயும் போட்டு காரம் சேர்க்காமல் சமைத்து சாப்பிட்டால் குடல்புண், வாய்ப்புண் ஆறு

விந்து முந்துதலை தவிர்க்கும் ஆண்மை பெருக்கும்…!!


விந்து முந்துதலை தவிர்க்கும் ஆண்மை பெருக்கும்…!!

விந்து முந்துதலை தவிர்க்கும் ஆண்மை பெருக்கும் மூலிகை-
ஜாதிக்காய் ,ஜாதி பத்ரி (படங்களுடன்)
botonical name- myristica fragrans
விந்து முந்துதலை தவிர்க்க மூலிகைகள் பல உள்ளன,அதில் மிக எளிதாக மிகவும் பயனுள்ள மூலிகை ஜாதிக்காயும் ,ஜாதி பத்ரி யும் .
ஜாதிக்காயை ஊறுகாயாக சாப்பிடவே கூடாது.
ஜாதிக்காய் சூரணத்தை கால் பங்கு எடுத்து அதனுடன் மற்றுமுள்ள ஆண்மை பெருக்கும் மூலிகைகளின் பொடியோடு இரவில் பாலில் கலந்து சாப்பிட விண்டு முந்துதல் நிற்கும்.ஜாதிக்காய் அதிகம் சாப்பிட்டால் மலச்சிக்கல் உண்டாகும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.விந்து முந்துதல் சரியாக்கும் பல ஆயுர்வேத மருந்துகள் உள்ளது.விவரம் அறிய கேள்வி கேளுங்கள்..
இந்த பாட்டு படித்தால் -எளிதாக புரியும் ..


ஜாதிக்காய்
தாது நட்டம் பேதி சருவாசி யஞ்சிர நோய்
ஓது சுவா சங்காசம் உட்கிரணி-வேதோ
டிலக்காய் வரும் பிணி போம் ஏற்ற மயல் பித்தங்
குலக்கா யருந்துவர்க்குக் கூறு
ஜாதி பத்ரி
சாதி தரும் பத்திரிக்குத் தாபச் சுரந்தணியும்
ஓது கின்ற பித்தம் உயருன்காண்-தாது விர்த்தி
யுண்டாங் கிரகணியோ டோதக் கழிச்சலறும்
பண்டாங் குறையே பகர்

ஆண்களின் ஆண்மையை அதிகரிக்க சில முக்கியமான டிப்ஸ்…


ஆண்களின் ஆண்மையை அதிகரிக்க சில முக்கியமான டிப்ஸ்…

கருவுறுதலில் ஏற்படும் பிரச்சனை பெண்களுக்கு மட்டும் ஏற்படுவதில்லை, ஆண்களுக்கும் தான் ஏற்படுகிறது. ஆனால் அத்தகைய பிரச்சனை தற்போது இந்தியாவில் ஆண்களிடையே அதிக அளவில் உள்ளது என்று தற்போதைய ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கு காரணம் ஆண்களின் ஸ்பெர்ம்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதற்கு ஆண்களது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, மன அழுத்தம் மற்றும் தம்பதியரிடையே சரியான அன்பு வெளிப்படுத்த முடியாதது என்பனவையே காரணங்களாக இருக்கும். ஆகவே இத்தகையவற்றை சரியாக போக்கி, ஸ்பெர்ம்களின் எண்ணிக்கையை அதிகரிக்க சில டிப்ஸ் இருக்கிறது.
* ஆரோக்கியமான, ஊட்டச்சத்துள்ள உணவுகள் ஆண்களின் ஸ்பெர்ம்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். ஆகவே தேவையில்லாமல் மருத்துவர்களிடம் சென்று பணத்தை செலவழிப்பதை விட, ஆரோக்கிய மற்றும் பாலுணர்வை, ஆண்மையைத் தூண்டும் உணவுகளான சீஸ், சிக்கன், ஓட்ஸ், கடல் உணவுகள், பச்சை காய்கறிகள், கேரட், மிளகு, முக்கியமாக மீனில் சாலமனை சாப்பிட வேண்டும்.
* புகைபிடித்தல் மற்றும் ஆல்கஹால் சாப்பிடுவதை முற்றிலும் நிறுத்த வேண்டும். நிறைய ஆண்களுக்கு இந்த பழக்கம் தேவையில்லாமல் இருக்கிறது. இவற்றை பிடிப்பதால், ஆண்மை மட்டும் குறைவதில்லை, உடலும் தான் பாதிக்கப்படுகிறது. ஆகவே இதனை நிறுத்த வேண்டும். முடியவில்லை என்றால் கர்ப்பமாகும் வரையிலாவது சாப்பிடாமல் இருக்க முயற்சியுங்கள்.
* அளவுக்கு அதிகமான எடை மற்றும் குண்டாக இருப்பது கூட, ஆண்களின் ஸ்பெர்ம்களின் எண்ணிக்கையை குறைக்கிறது. ஆகவே அனைத்து ஆண்களும் மனதில் கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று அளவுக்கு அதிகமாகவும், குறைவாகவும் உடல் எடை இருக்கக்கூடாது. மேலும் இனப்பெருக்கத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்கள் மற்றும் உறுப்புகள் நன்கு செயல்பட, ஆரோக்கியமான டயட் மற்றும் உடல் எடை இருக்க வேண்டும். எப்போதும் உடலை நன்கு பிட்டாக வைத்திருக்க வேண்டும். வேண்டுமென்றால் தினமும் யோகா அல்லது உடற்பயிற்சி போன்றவற்றை செய்யலாம்.
* ஆண்களின் ஸ்பெர்ம்கள் எந்த நேரத்தில் சரியான அளவு இருக்கும் என்பதைப் பற்றி ஆய்வு மேற்கொண்ட போது, காலை நேரம் தான் அதற்கு சரியான நேரம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே இரவு நேரத்தில் காதலை வெளிப்படுத்துவதற்கு, காலை நேரத்தில் காதலை வெளிப்படுத்தினால் மிகவும் சரியாக இருக்கும் என்று கூறுகின்றனர். அதுவும் இருவருக்கும் பிடித்திருந்தால் மட்டும் காலையில் செய்ய வேண்டும்.
* நிறைய ஆய்வுகள் அதிக அழுத்தத்தின் காரணமாக, தம்பதியர்களுக்கிடையே உள்ள காதல் தடைப்பட்டு, ஆண்களின் ஸ்பெர்ம்களின் எண்ணிக்கை குறைகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே எப்போதும் அமைதியாக, எதற்கும் டென்சன் ஆகாமல், அடிக்கடி யோகா செய்தால், வாழ்க்கை நன்கு அமைதியாக, அன்பாக போவதோடு, மனமும் ரிலாக்ஸ் ஆகும்.
எனவே ஆண்கள் மேற்கூறிய அனைத்தையும் நினைவில் கொண்டு வாழ்ந்து வந்தால், ஆண்மை அதிகரிப்பதோடு, வாழ்க்கையும் சந்தோஷமாக செல்லும்.

மலட்டுத்தன்மையை நீக்கும் மண்பாண்ட சமையல்: நிபுணர்கள் அறிவுரை


மலட்டுத்தன்மையை நீக்கும் மண்பாண்ட சமையல்: நிபுணர்கள் அறிவுரை

குழந்தை இல்லா குறை என்பது இன்றைக்கு பெரும்பாலான தம்பதிகளிடம் காணப்படுகிறது. இதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டால் லட்சக்கணக்கில் பணம் செலவழிக்கவேண்டும். ஆனால் உணவுப் பழக்கத்தை மாற்றுவதன் மூலம் குழந்தையின்மை குறையை சரி செய்யலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

இன்றைக்கு எதற்கெடுத்தாலும் ரெடிமேட் உணவுகளையோ, மசாலாக்களையோ உபயோகிக்கின்றோம். செயற்கை உணவுகளும் ரசாயன உரங்களும் உடம்பில் நச்சுத்தன்மையை ஏற்படுத்திவிடுகின்றன. உயர் ரத்த அழுத்தம் தொடங்கி உயிர்கொல்லியான புற்றுநோய் வரை மனிதர்களை தாக்குவதோடு மலடாகவும் மாற்றிவிடுகிறது. மலட்டுத்தன்மையை தடுக்க உணவுகளை எவ்வாறு உண்ணவேண்டும், எவற்றை தவிர்க்கவேண்டும் என்று நிபுணர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.

இன்றைக்கு கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்வதால் சமைத்து ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடுவதை இளைய தலைமுறையினர் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இது தவறான நடைமுறையாகும். அன்றாடம் புதிதாக சமைத்த உணவுகளை உண்ணவேண்டும் அதுதான் ஆரோக்கியம்.
ரெடிமேட் மசாலாக்கள்
பண்டைய காலங்களில் செயற்கை நிறம், மணம் சேர்க்கப்பட்ட உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஃபாஸ்ட் புட் போன்றவை இல்லை. ஆனால் இன்றைக்கு மஞ்சள்தூள் தொடங்கி மிளாகாய்த்தூள், சாம்பார் பவுடர் என கலர் கலராய் ரெடிமேட் மசாலா உணவுப் பொருட்கள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதில் செயற்கை மணத்திற்காக உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை சேர்க்கப்படுகின்றன. இந்த செயற்கைப் பொருட்கள்தான் மலட்டுத்தன்மைக்கு காரணமாகிறது என்கின்றனர் நிபுணர்கள்.

இந்த செயற்கை மசாலாத்தூளில் எடையை அதிகரிப்பதற்காக அதில் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சேர்க்கப்படுவதாக சோதனையில் கண்டறியப்பட்டது. இந்த கிழங்குமாவு கெட்டுவிடும் என்பதால் அதற்காக பிரசர்வேடிவ் சேர்க்கின்றனர் என்றும் தெரியவந்துள்ளது.
சினைப்பை நீர்க்கட்டி

பாலிசிஸ்டிக் ஓவரியன் டிஸார்டர்(பிசிஒடி) என்ற சினைப்பை நீர்க்கட்டியை கரைக்கச் செய்யும் மிகப்பெரிய மருந்து மிளகு ரசம். மிளகு, சீரகம், பூண்டு, கட்டிப்பொருங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை சேர்த்து ரசம் வைத்து சாப்பிட்டால் இந்த ஓவரியன் நீர்க்கட்டிகள் தன்னால் கரையும் என்கின்றனர் மருத்துவர்கள். இதேபோல் கொள்ளுரசம் சாப்பிட்டால் உடல் பருமன் குறையும், பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினை இருந்தால் சீராகும் என்கின்றனர் நிபுணர்கள்.
விந்து உற்பத்தி அதிகரிக்க

சின்ன வெங்காயம் சாம்பார் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் விந்து உற்பத்தி அதிகரிக்கும். பெண்களுக்கு வெள்ளைப்படுதல் நோய் குணமாகும். நல்லெண்ணையில் சின்ன வெங்காயத்தை வதக்கி சாப்பிட்டாலும் ஆண்களுக்கு விந்து உஉற்பத்தி அதிகமாகும்.
திராட்சை, உலர்திராட்சைப் பழங்கள், சோயா, வால்நட், முருங்கைப் பூ போன்றவை பெண்களின் மாதவிடாய் பிரச்சினையை தீர்க்கும். மலட்டுத்தன்மையை குணமாக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
மண்பானை சமையல்

பண்டைய காலங்களில் வீடுகளில் மண்பாண்டங்களில் சமைத்தனர். அதனால்தான் எளிதாக ஐந்து, ஆறு குழந்தைகளை கூட பெற்று ஆரோக்கியமாக வாழ முடிந்தது. ஆனால் இன்றைக்கு சமைக்கும் பாத்திரங்களும், முறைகளும் கூட மாறிவிட்டன. இதனால்தான் விந்தணு உற்பத்தியில் சிக்கல் ஏற்படுகிறது. மண்பானையில் சமைத்தால் விந்து நீர்த்துப்போவதை தடுக்கும். விந்துவை கெட்டிப்படுத்துவதோடு உற்பத்தியை அதிகமாக்கும்.

மண்பாண்டச் சமையல் பெண்களுக்கு வெள்ளைப்படுதல் நோயை குணமாக்கும். சரியான உணவை தேர்ந்தெடுத்து சரியான முறையில் சமைத்து சாப்பிட்டால் உடல்குறை நீங்குவதோடு குழந்தைப் பேறு ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள்.

செக்ஸ் உறவுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் சாதிக்காய்..!!


செக்ஸ் உறவுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் சாதிக்காய்..!!

செக்ஸ்… ஓரு நல்ல உடற்பயிற்சி. கணவனும், மனைவியும் உச்சத்தில் இருக்கும் போது இருவரது உடலிம் அனைத்து உறுப்புகளும் படுவேகமாக இயங்குகிறது. இந்த வேலை முடிந்ததும் இருவரது உடலிலும் நச்சு திரவம் வியர்வையாக வெளியேறுகிறது. எனவே கணவன்-மனைவியும் அடிக்கடி தாம்பத்யம் கொண்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்று- சித்த மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

திருமணமான கணவன்-மனைவியும் ஓராண்டுக்குள் குழந்தை பேறு இல்லை என்றால் ஊரார் அந்த பெண்ணை பழி பேசுவார்கள். கல்யாணம் ஆகி இவ்வளவு நாள் ஆகிறது. இன்னும் ஒரு புழு பூச்சி கூட இல்லையா? என ஏளனம் பேசுவார்கள். இதற்கான காரணம் தாம்பத்யம் உறவில் திருப்தி இன்மை, ஆண் உறுப்பு விறைப்பு இல்லாதது, விரைவில் சக்தி வெளியேறுதல், இதுதான் குழந்தை பேறின்மைக்கு காரணம் என்று  மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஆண்மைக்கு நல்ல மருந்தாக, செக்ஸ் இன்பத்துக்கு நல்ல விருந்தாக திண்டுக்கல்லில் செக்ஸ் காய் என்கிற சாதிக்காய் விற்பனை ஆகிறது. சமையலில் மணம் சேர்க்க நம் முன்னோர்கள் உபயோகித்த பொருட்கள் மருந்தாக நம் ஆரோக்கியத்தை காக்க கூடியவை. அந்த வகையில் சாதிக்காய் ஆண்மை விருத்தியை அதிகரித்து இன்ப நேரத்தை நீட்டிக்க வல்லது.

பொதுவாக மணம் உள்ள பொருள் என்றுமே வீரியத்தை தூண்டக்கூடியது. உதாரணமாக மல்லிகை பூ அணிந்து கன்னியர் பாதையை கடந்தாலே காளையர்களுக்கு ஒரு வீரியத்தை தூண்டுகிறது. இது போல்தான் சாதிக்காய் நறுமணத்தை தரக்கூடியது.  எனவே தான் சாதிக்காயும் ஆண்மையை தூண்டும் மருத்துவ குணம் உடையது என்று சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

சாதிக்காய் இந்தோனேசியா, மலூக்கா தீவுகளில் இருந்து அவை முதலில் பெறப்பட்டாலும் இலங்கை மற்றும் இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைகளிலும், பின்னர் ஐரோப்பா, மேற்கிந்திய தீவுகளிலும் சாதிக்காய் வளர்கிறது. சாதிக்காய் பற்றி சித்தமருத்துவர்கள் கருத்துக்கள் விவரம் வருமாறு:-

சின்னாளப்பட்டி அருளகம் சித்த வைத்திய சாலை சித்த மருத்துவர் எஸ்.சிவமுருகேசன்:-

சாதிக்காய் அழகிய நறுமணம் உள்ள இலைகளையும், மஞ்சள் பூக்களை கொண்டது. இது மர வகையை சேர்ந்தது. சாதிக்காய் சிறிய கோழி முட்டை அளவில் இருக்கும். இதன் சுவை துவர்ப்பு, கார்ப்பு. இது வீரியத்தை உண்டாக்கி வாசனையை பெருக்கி காமத்தை பெருக்கும். உடலுக்கு நல்ல உரத்தினை உண்டாக்கும். சூட்டை தணித்து ஆண்மையை அதிகரிக்கும். ஆண்மை குறைவு உள்ளவர்கள் சாதிக்காய் பொடியை  அரை தேக்கரண்டி எடுத்து பசும்பாலில் சாப்பிட்டு வந்தால் தாது விருத்தி அதிகரிக்கும்.

திண்டுக்கல் செல்லம் மருத்துவமனை டாக்டர் கோகுலகுமார்:- சாதிக்காய் செக்ஸ் உணர்வை தூண்டக்கூடியது. அதிக விந்தணுக்களை உருவாக்கும் தன்மை கொண்டது.  விறைப்பு தன்மையை உண்டாக்கி தாம்பத்யத்தை அதிக நேரம் நீட்டிக்க கூடியது. நரம்பு தளர்ச்சியை போக்கி ஒரு புதிய சக்தியை கொடுக்ககூடியது. விந்தணுக்களின் எண்ணிக்கையை சாதிக்காய் அதிகரிக்கும். இதனை லேகியமாக சாப்பிட்டு வந்தால் புதிய தெம்பு கிடைக்கும்.

தமிழ்நாடு சித்தமருத்துவ மைய டாக்டர் முகமது மாலிக்:-  சாதிக்காய் விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும். திரவம் போல் இருக்கும் விந்துவை கெட்டியாக உருவாக்கும் தன்மை சாதிக்காய்க்கு உண்டு. பொதுவாக டிரைவர்கள் எப்போதும் வாகனங்கள் ஓட்டியபடி இருப்பதால் உடலில் சூடு அதிகம் இருக்கும். இதனால் விந்தணுக்கள் அவர்களை அறியாமல் வெளியேறிடும்.

எனவே சாதிக்காய் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு குளிர்ச்சியை தந்து விந்து கெட்டியாக இருக்கும். இதனை பொடி செய்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும். ஒரு மணமூட்டி காய்க்கு இப்படி ஓராயிரம் மருத்துவ குணம் உண்டு. இதனை முழுமையாக புரிவது கடினம். புரிந்ததை பார்த்து வியந்ததோடு மட்டுமல்லாமல் அதனை எந்தவிதத்திலும் சிதைத்திடாமல் காத்திடுவதும் கூட நம் கடமைதான்

Monday 10 December 2012

நோய் எதிர்ப்பு சக்திக்கு



மூட்டு நோய்க்கு வர்ம மருத்துவம் ......................................




கேழ்வரகு





கொழுப்பை குறைக்கும் உணவுகள்

கொழுப்பை குறைக்கும் உணவுகள்
[ திங்கட்கிழமை, 10 டிசெம்பர் 2012, 09:59.09 மு.ப GMT ]
இன்றைய காலத்தில் சிறு வயதிலேயே தொப்பை வந்துவிடுகிறது. இதற்கு உண்ணும் உணவில் எந்த ஒரு கட்டுப்பாடும், ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களும் இருப்பதே ஆகும்.
வயிற்றில் கொழுப்புகள் சேர்ந்து உருவாகும் தொப்பையையும் குறைக்க ஒரு சில உணவுகள் உள்ளன.
கருப்பு பீன்ஸ்
பொதுவாக பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளில் புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் இருக்கும்.
இவற்றை சாப்பிட்டால் பசியே ஏற்படாது. அதிலும கருப்பு பீன்ஸில் அளவுக்கு அதிகமான அளவில் ஃப்ளேவோனாய்டுகள் உள்ளன.
இந்த உணவை அதிகம் சாப்பிட்டால், வயிற்றில் சேரும் கொழுப்புகள் குறையும் என்று ஆய்வுகள் பலவும் கூறுகின்றன. ஆகவே மறக்காமல் இந்த கருப்பு பீன்ஸை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
பேரிக்காய்
பேரிக்காயில் குறைவான அளவில் கலோரி இருப்பதோடு, நார்ச்சத்து அதிகமாக உள்ளது.
ஆகவே இந்த பழத்தை தினமும் உணவு சாப்பிடுவதற்கு முன் சாப்பிட்டு, பின்னர் உணவை சாப்பிட்டால், உடல் எடை நிச்சயம் குறையும்.
ஏனெனில் ஆய்வு ஒன்றில் இந்த பழத்தில் நார்ச்சத்துக்கள் மட்டுமின்றி, கேட்டிசின்ஸ் மற்றும் ஃப்ளேவோனாய்டு என்னும் இரண்டு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன.
இவை உணவில் இருக்கும் கொழுப்புகள் வயிற்றில் தங்காமல் பார்த்துக் கொள்ளும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கை சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் இதனை சாப்பிட்டால் உடல் எடை குறைவதோடு, கொழுப்புகள் சேராமல் இருக்கும்.
வேர்க்கடலை
நட்ஸ் வகைகளில் வேர்க்கடலை மிகவும் சுவையுடன் இருக்கும். அத்தகைய வேர்க்கடலையில் சுவை மட்டும் இருப்பதோடு அதனை சாப்பிட்டால், உடல் எடையும் குறையும்.
ஏனெனில் இதில் என்னதான் கொழுப்புகள் இருந்தாலும் அவை மிகவும் ஆரோக்கியமானவை. மேலும் அவை உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்துவிடும். ஆகவே இதனை எப்படி வேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம்.
சூரியகாந்தி விதைகள்
கடைகளில் விற்கப்படும் சூப், சாலட் மற்றும் சாண்ட்விச் போன்றவற்றின் மீது சூரியகாந்தி விதைகள் அழகுக்காகவும், சுவைகாகவும் சேர்க்கப்படுகிறது.
அத்தகைய சூரியகாந்தி விதைகளில் ஆரோக்கியமான கொழுப்பான மோனோ-அன்-சாச்சுரேட்டட் கொழுப்பு உள்ளது. ஆகவே இவற்றை தொப்பை உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள கொழுப்புக்கள் கரைந்துவிடும்.
வெள்ளை டீ(White Tea)
நாம் இதுவரை கிரீன் டீ மட்டும் தான் உடல் எடையை குறைக்கும் என்று நினைத்துள்ளோம். ஆனால் கிரீன் டீயை விட வெள்ளை டீ உடலுக்கு ஆரோக்கியத்தை தரும்.
ஏனெனில் அவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக இருக்கிறது. கிரீன் டீயில் 20 கிராம் காஃப்பைன் இருந்தால், இதில் 15 கிராம் தான் இருக்கிறது.
மேலும் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைத்து இதய நோய் ஏற்படாமல் தடுப்பதோடு, உடல் எடையை குறைப்பதிலும் கிரீன் டீயை விட இது மிகவும் சிறந்தது.
ஆப்பிள் சீடர் வினிகர்
ஆப்பிள் சீடர் வினிகர் சுவைக்காக பல உணவகங்களில் சாலட் மற்றும் பலவற்றில் சேர்க்கப்படுகிறது. அத்தகைய ஆப்பிள் சீடர் வினிகரில் அசிடிக் ஆசிட் இருக்கிறது.
இந்த ஆசிட் உடலில் சென்றால் உடலில் உள்ள கொழுப்புகள் கரைவதோடு, கொழுப்புகள் சேராமலும் தடுக்கும்.
ஆகவே உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க நினைப்பவர்கள், இந்த ஆப்பிள் சீடர் வினிகரை சேர்த்துக் கொண்டால் நன்மையைப் பெறலாம்.

Wednesday 5 December 2012

குளிர்காலத்திற்கு ஏற்ற உணவுகள்

குளிர்காலத்திற்கு ஏற்ற உணவுகள்
[ புதன்கிழமை, 05 டிசெம்பர் 2012, 08:40.05 மு.ப GMT ]
குளிர்காலம் என்றாலே சளி, ஜலதோஷம் பிடிக்கும் என்பதற்காக பழங்களை சாப்பிடுவதையே நிறுத்திவிடுவார்கள்.
இவ்வாறெல்லாம் சரியாக சாப்பிடாமல் இருந்தால் உடலை எந்த ஒரு கிருமிகள் தாக்கினாலும், அவை எளிதில் உடலில் புகுந்து தங்கிக் கொள்ளும் நிலை ஏற்படும்.
எனவே குளிர்காலத்தில் எத்தகைய உணவுகள் சாப்பிடலாம் என்ற பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.
ஆரஞ்சு
குளிர்காலத்தில் அதிகமான அளவில் சளி, ஜலதோஷம் பிடிக்கும். ஆகவே அத்தகையவற்றை தடுக்க உடலில் போதிய அளவில் நோய் எதிர்ப்பு சக்தியான வைட்டமின் சி அவசியமாகிறது.
அத்தகைய சத்து ஆரஞ்சு பழத்தில் அதிகம் உள்ளன. எனவே இதனை குளிர்காலத்தில் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
பசலைக் கீரை
பொதுவாக கீரை வகைகளை அதிகம் சேர்த்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
அதிலும் பசலைக் கீரையை உணவில் அதிகமாக சேர்த்து வந்தால், அதில் உள்ள அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்துக்கள் உடலில் சேர்ந்து நோய் தாக்காமல் உடலை ஆரோக்கியமாக வைக்கும்.
வேர்க்கடலை
வேர்க்கடலையை குளிர்காலத்தில் அதிகம் சாப்பிட வேண்டும். அது வறுத்ததாகவோ, உப்பாகவோ அல்லது சாதாரணமாகவோ இருந்தாலும், அதை சாப்பிட்டால் உடலில் உள்ள வெப்பம் சரியான அளவு இருப்பதோடு, புரோட்டீனும் அதிகம் கிடைக்கும்.
கொய்யாப்பழம்
இந்த பழம் நோய் எதிர்ப்பு சக்தியை மட்டும் கொடுப்பதில்லை, இதயத்தையும் ஆரோக்கியமாக வைக்கிறது.
அதிலும் கொய்யாவில் லைகோபைன் என்னும் பொருள் இருப்பதால், அது இதயத்தில் ஏற்படும் பிரச்சனையை தடுக்கிறது.
ஆகவே குளிர்காலத்தில் பிங்க் மற்றும் சாறுள்ள கொய்யாப்பழத்தை அதிகம் வாங்கி சாப்பிட வேண்டும்.
கேரட்
கேரட்டை இயற்கையின் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். ஏனெனில் அந்த அளவு இதில் வைட்டமின்களான பி, சி, டி, ஈ மற்றும் கே உள்ளன.
மேலும் இதில் உள்ள கரோட்டீன என்னும் பொருள் உடலினுள் செல்லும் போது வைட்டமின் ஏ-வாக மாறிவிடுகிறது. எனவே இத்தகைய கேரட்டை சேர்ப்பது அவசியமாகிறது.
கிவி
இது மற்றொரு சிறப்பான வைட்டமின் சி நிறைந்துள்ள பழம். அதிலும் இந்த பழத்தின் மேல் சிறிது உப்பை தூவி, காலை வேளையில் அல்லது மாலை வேளையில் சாப்பிட்டால் உடலுக்கு சத்து கிடைத்தது போன்றும் இருக்கும், வயிறு நிறைந்தது போன்றும் இருக்கும்.
சிக்கன் சூப்
சூப் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். அவ்வாறு சாப்பிடும் சூப்பில் சிக்கன் சூப் சாப்பிட்டால், குளிர்காலத்திற்கு இதமாக இருக்கும்.
நட்ஸ் மற்றும் உலர் பழங்கள்
சாதாரணமான பழங்களை சாப்பிடுவதை விட, உலர் பழங்களை சாப்பிடுவதால் உடலில் அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.
சொல்லப்போனால் நல்ல ஃப்ரஷ்ஷான பழங்களை விட உலர் பழங்கள் தான் நல்லது. ஆகவே இத்தகைய உணவுப் பொருட்களை நட்ஸ் உடன் தினமும் சேர்த்து சாப்பிட்டால், முக்கியமாக குளிர்காலத்தில் சாப்பிட்டால், கிருமிகள் எளிதில் உடலைத் தாக்காமல் தடுக்கும்.