Monday 25 April 2011

பாட்டி வைத்தியம்


பாட்டி வைத்தியம்


             கோடை  விடுமுறை தொடங்கி விட்டதால், பாட்டி படு பிஸியாகிவிட்டாள்.

ஊரிலிருந்து பேரக்குழந்தைகள் என பெரும் கூட்டமே வந்து குவிந்து விட்டதால், அவர்களைக் கவனிக்கவே பாட்டிக்கு நேரம் சரியாக இருந்தது.

மொட்டை மாடியில் பேரன் பேத்திகள் புடை சூழ வடகம் போட்டுக் கொண்டிருந்தாள் பாட்டி.  வெயில் வருவதற்கு முன் வடகத்தை போட வேண்டும் என்ற பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தாள்.  இந்த வயதிலும், அவளது விரல்கள் செயல்படும் நளினத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது மழலையர் கூட்டம்.

“என்ன பாட்டி... நீ போடுற வடகத்தின் வாசனை ஊரையே தூக்குது.  தெரு முனையில வர்ற போதே, பாட்டி வடகம் போட்டுக் கிட்டுருக்குங்குறதை அந்த வாசனையே சொல்லுதே...”  பாட்டியின் கைப்பக்குவத்தை புகழ்ந்தபடியே வந்து உட்கார்ந்த சுசீலா, பாட்டிக்கு ஒத்தாசை செய்யத் தொடங்கினாள்.  

சுசீலாவைப் பார்த்து... “வாடியம்மா” என்று வரவேற்ற பாட்டி, மேலும் பேசத் தொடங்கினாள்.

“ஆமாடியம்மா... என்ன பண்றது... ஏதோ இந்தக் கட்டை கெடக்குற வரைக்கும் புள்ளைங்க ஆசைக்கு எதையாவது செஞ்சு போட்டுக்குட்டு இருப்பேன்...  எனக்குப் பெறகு யாரு இவங்களையெல்லாம் கொண்டாடப் போறாங்க... அது கெடக்கட்டும்... நீ என்னடியம்மா காலங்காத்தால இந்த பக்கமா வந்துருக்கே...” என்று வாஞ்சையுடன் கேட்டாள்.

“ஒண்ணுமில்ல பாட்டி....” என்று சொல்லியபடியே தயக்கத்துடன் அக்கம் பக்கம் பார்த்தாள் சுசீலா.

“ஏண்டியம்மா தயங்குறே... சின்னக் குழந்தைங்க தானே இருக்குதுங்க... நீ சும்மா சொல்லு...” என்று அவள் தயக்கத்தைப் போக்கிய பாட்டி, வடகம் போடுவதை தற்காலிகமாக நிறுத்தி விட்டு சுசீலா சொல்ல வந்ததை கவனித்தாள்.

“அது இல்ல பாட்டி... எனக்குத்தான் இந்த வெயில் அதிகமானதுல இருந்தே சிறுநீர் சரியா போகல... ஒரே கடுப்பா இருக்கு... சிறுநீர் கழிச்சப்புறம் ஒரே எரிச்சல், அடிவயிறு வலி ஊசியால குத்துறமாதிரி இருக்கு... அதுக்குத்தான் ஏதாவது மருந்து கேட்டுப் போகலாம்னு வந்தேன்...” என்றாள்.

“இதுதானா, கவலைப்படாதடியம்மா... அதுக்கு நான் மருந்து சொல்றேன்.. சரியாப் போகும்..  நீர்க்கடுப்புக்கு வெயில் மட்டுமே காரணம் இல்ல.. நேரத்துக்கு சாப்பிடாம இருக்குறது.  சரியான தூக்கமில்லாம இருக்குறது... தேவையற்ற சிந்தனை, மன உளைச்சல்.. இதனாலேல்லாம் தான் நீர்க்கடுப்பு  வருது...  மொதல்ல இந்த பழக்கங்கள மாத்திக்கணும்...”

“ நீர்க்கடுப்புக்கு

சீரகம் 

சோம்பு

வெந்தயம்

சின்ன வெங்காயம்

கொத்தமல்லி விதை

இது எல்லாத்தையும் சம அளவு எடுத்து அரைச்சு மோர் அல்லது தயிர்ல கலந்து குடிக்கலாம்.    இல்லாட்டியும் இதையெல்லாம் பொடியாக்கி தேனிலும், நெய்யிலும் கலந்து சாப்பிடலாம்.  நீர்க்கடுப்பு உடனே குணமாயிடும்...”

“வேனல் காலத்துல நெறயா தண்ணி குடிக்கணும்...”

பாட்டி சொன்னதைக் கேட்ட சுசீலா..  அவளுக்கு ஒத்தாசையாக வடகத்தை வேகமாக தட்டிக் கொடுத்துவிட்டுச் சென்றாள்.

வடகத்தைத் தட்டலாம். பாட்டி சொல்லைத் தட்ட முடியு

No comments:

Post a Comment