Monday 25 April 2011

முகம் பொலிவு பெற..


முகம் பொலிவு பெற..


                  கத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழிக்கேற்ப, உடலின் உள்ளே என்ன பாதிப்பு இருந்தாலும் அது முகத்தில் பிரதிபலிக்கும். 

சிலர் இராசாயன பூச்சுக்கள் மூலம் முகத்தை பொலிவாக்கலாம் என்று எண்ணி இவற்றை அதிக விலைக்கு வாங்கி உபயோகப்படுத்துகின்றனர்.  ஆரம்பத்தில் முகம் நன்கு பொலிவாக காணப்படும்.  ஆனால் சில நாட்கள் செல்லச்செல்ல இந்த ரசாயனமுகப்பூச்சுகள் முகத்தை பாழடித்துவிடும்.

முகப் பொலிவு இழக்க மலச்சிக்கலும் ஒரு காரணமாகும்.  மலச்சிக்கலைப் போக்கினாலே முகத்தில் உண்டாகும் முகப்பரு, கரும்படலம், கருந்திட்டுக்கள் போன்றவை ஏற்படாது.

ஆனால் முகத்தில் இதன் பாதிப்பு தெரியவந்தால் மலச்சிக்கலைப் போக்குவதுடன் இரசாயனம் கலவாத மூலிகைப் பூச்சுக்களை பயன்படுத்தி முகத்தை பொலிவுபெறச் செய்ய முடியும்.

மலச்சிக்கலைப் போக்க எளிதில் சீரணமாகக்கூடிய உணவுகளை உட்கொள்ள வேண்டும்.  அதிகம் நீர் அருந்த வேண்டும்.

முகத்தில் முகப்பரு, அலர்ஜி, முகச் சுருக்கம், கருமை, எண்ணெய் வடிதல் இருந்தால்

ஆவாரம் பூவை நிழலில் உலர்தி காயவைத்து பொடி செய்து எடுத்து அதனுடன் கடலை மாவு கலந்து முகத்தில் தேய்த்து அரை மணி நேரத்திற்கு  பிறகு முகத்தை இளம் வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால் முகப்பரு, முகச்சுருக்கம் போன்றவை மாறி முகம் பொலிவுபெறும்.

முகச் சுருக்கம் நீங்க

சிலருக்கு முகச் சுருக்கங்கள் ஏற்பட்டு 25 வயதிலேயே முதுமையடைந்தவர் போன்ற தோற்றத்தை உண்டாக்கும்.  இவர்கள் 

நல்லெண்ணெய் - 10 மி.லி.

தண்ணீர் - 10 மி.லி.

எடுத்து ஒன்றாக கலக்கிக் கொண்டேயிருந்தால் அது வெண்மையாகி வெண்ணெய் போல் மாறும்.  இதை முகத்தில் நன்கு பூசி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி வரவேண்டும்.  இவ்வாறு தொடர்ந்து செய்துவந்தால் முகச் சுருக்கம் நீங்கும்.

பார்லி மாவு - 5 கிராம்

தேன் - 5 மி.லி

முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து ஒன்றாக்கி நன்கு கலக்கி முகத்தில் பூசி 10  நிமிடங்கள் கழித்து இளம் சூடான நீரில் கழுவி வந்தால் முகச்சுருக்கம் மறையும்.

முகப்பரு நீங்க

கஸ்தூரி மஞ்சளை நன்கு அரைத்து அதனுடன் வெண்ணெய் கலந்து நன்கு கலக்கி முகத்தில் பருவுள்ள இடங்களில் பூசி சீயக்காய் பொடியைக் கொண்டு நன்றாக தேய்த்து கழுவ வேண்டும்.  இவ்வாறு தொடர்ந் செய்துவந்தால் முகப்பரு நீங்கும்.

முகப்பரு உள்ளவர்கள் குங்குமத்திலேபம் என்ற ஆயுர்வேத மருந்தை வாங்கி தினமும் இரவு படுக்கைக்கு செல்லும் முன் முகத்தில் தடவி வந்தால் முகப்பருக்கள் நீங்கும்.

பாதாம் எண்ணெயுடன் தேன் கலந்து பூசி வந்தால் முகம் நல்ல நிறமாகவும் பிரகாசமாகவும், அழகாகவும் தோன்றும்.

கரும்புள்ளி நீங்க

கருஞ்சீரகத்தைபொடித்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டி எடுத்து தேவையான அளவு பால் சேர்த்து நன்கு குழைத்து முகத்தில் பூசி 1 மணி நேரம் ஊறவைத்து பின் இளம் சூடான நீரில்  முகத்தை கழுவி வந்தால் கரும்புள்ளிகள் நீங்கும்.

கருந்தேமல் மறைய

கருந்தேமல் உள்ளவர்கள், இரவு படுக்கைக்குச் செல்லும் முன் கொத்தமல்லி கீரையை சாறு பிழிந்து தேமல் உள்ள இடங்களில் பூசி வந்தால் கருந்தேமல் மாறும்.

நாயுருவிச் செடியின் இலைகளை கசக்கி சாறு எடுத்து தேமலின் மேல் பூசி வந்தால் தேமல் குணமாகும்.

உள்ளங்கை சொசொரப்பு நீங்க

எலுமிச்சம் பழச்சாற்றை உள்ளங்கைகளில் தேய்த்து வந்தாலே உள்ளங்கை சொரசொரப்பு நீங்கி உள்ளங்கை மிருதுவாகும்.

No comments:

Post a Comment